Ads 468x60px

Featured Posts

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

பர்தா "சவுகரியமா? இதன் மூலமா?"-சகுந்தலா நரசிம்ஹன்

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் 

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள். 

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.
நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது. 

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார். 

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.
"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன். 

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறியதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!


சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!
- தமிழாக்கம்: அபூ ஸாலிஹா 
தமிழ் மனம் ஒட்டு போட கிளிக்

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்

தமிழகம் எனும் திறந்த வெளியில்
எங்கும் இருட்டு எதிலும் இருட்டு
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம்
மற்ற எல்லா மாவட்டங்களிலும்
கிட்டதட்ட 16 மணி நேரங்கள் மின் தடை

எட்டு மணி நேர வேலையை மக்கள் விரும்புவது போல்
மின்சாரமும் இப்போ வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறது  .

அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

 கலைஞர் ஆட்சியில் ஐந்து மணி நேரம் வரை இருந்த மின் வெட்டை எல்லா ஊடகங்களும் ஒப்பாரி வைத்தே ஆட்சிக்கு ஆப்பு வைத்தனர்

       அதன் பின் இப்போதைய புர்ர்ர்ர்ர்ர்ரட்சி தலிவி ஆட்சியில்
வெறும் ஐந்தே மணி நேரம் மட்டும் கரண்ட் இருந்தாலும்
எவனும் எங்கேயும் குரல் கொடுக்க மாட்டேங்கறான்..

ஏன்???

நான் ஏழாம் கிளாஸ் பாஸ் ன்னே நீங்க  SSLC பெயில் னே
எனும் காமெடிபோல்
அப்போ 5 மணி நேரம் கரண்ட் இல்லை இப்போ5 மணி நேரம் கரண்ட் இருக்குல்ல

 இல்லாதது பெருசா இருக்குறது பெருசா ன்னு நினைச்சு விட்டாய்ங்க போலிருக்கு

  அந்நிய நாட்டு தூதரகங்கள் இருக்காம் ,
அலுவலகங்கள் இருக்காம்
அதனால் சென்னை யில் மட்டும் கரண்ட் கட் பண்ண மாட்டாங்களாம்

வெளிநாட்டுக்காரனுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் ன்னு சொல்லி போஸ் கொடுத்தீங்களே அதன் விளைவு தானே இது

பத்தாயிரம் கோடிக்கு மேல் முதலீடு பண்ற வெளிநாட்டுகாரனுக்கு எண்டா மானிய விலையில தடையில்லா மின்சாரம் ?
நீங்க நிறுத்திட்டா உடனே அவனே தயாரிக்க வழி பார்க்க போறான்

அடப்பாவிகளா

சிவகாசி கோயம்புத்தூர் நகரங்களில் உள்ளவங் களுக்கு  இது தானே சீசன்....

பட்டாசு ,டைரி ,காலண்டர் தொழில் செய்ய முடியல்லன்னா 
எவ்வளவு இழப்பு ? 

எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்,,,,,

அங்கு மட்டுமில்ல எல்லா ஊரிலேயும் இரவுல எல்லா மக்களும் நடுத்தெருவில தான் நிற்கிறானுங்க...

இல்லாத கரண்டுக்கு கரெக்டா பணம் கியூ வில் நின்னு கட்டுறவன்
இருக்குற வரைக்கும் இந்த நிலை தொடரத்தான் செய்யும் ,

கொஞ்ச நாளில்  தமிழக மாவட்டங்கள் எல்லாம் 
இருளும் இருள் சார்ந்த பகுதியாக அடையாளம் காணப்படலாம்.

இனி.....

வெளிநாட்டு தூதரகங்கள் ,நிறுவனங்கள் எல்லாம் விவசாயத்தையும் தொழிலையும் நமக்காக செய்யும் என எதிர்பார்க்கலாம்.






புதன், 19 செப்டம்பர், 2012

கருத்து சுதந்திரம் ? கிலோ எவ்வளோங்க ..?


கருத்து சுதந்திரங்கறது இதுவரை எமது பூமியில் இருந்துள்ளதா ? முஸ்லிம்கள் ஒரு மோசமான படத்திற்கு எதிராக போராடுகிறார்களே  அவர்கள் மட்டும்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களா?
அவர்களை பற்றி சொல்வதற்கு முன் நமக்கு என்னா தகுதி இருக்குன்னு பார்க்கலாமே ?

டாம் 999 படம் நினைவு இருக்கா ? தமிழ்நாட்டில் அது ஓடுச்சா..?

ஜெயராம் எனும் நடிகர் தமிழச்சிகளின் கலரை பற்றி பேசியபோது அவர் வீடு தாக்கபட்டதே..? அது என்னா சுதந்திரம் ?
ஓ தீபா மேத்தா  ....வாட்டர் ... திரைப்படம்.... இந்துத்துவா .... அட அதெல்லாம் பெரிசா பேச படாது...
ஓவியன் உசேன் என்பார் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தாராமே  அப்பு அப்ப எங்கேப்பா போச்சு உங்க கருத்து சுதந்திரம் ?

திப்பு சுல்தானின் வாள்- படம் போடும்போது நாம் கற்பனை என போட வேண்டும் என மிரட்டி தானே வெளியிட சொன்னோம் ...
அதற்காகதானே அந்த படபிடிப்பு செட்   எல்லாம் தீயிட்டு கொளுத்தினோம்
அந்த நடிகரின் முகத்தில் கூட நெருப்பு அடையாளம் பதிச்சோமே மறந்துடுச்சா?
 நம்ம குஷ்பூ அக்கா சொல்லுச்சே அது இதிலே வராதுல்ல.....
அப்புறம் இந்த கிறிஸ்துவர்கள் டாவின்சி கோட் அப்படின்னு ஒரு படம்
செயின்ட்  என்று ஒரு படம் அய்யய்யோ ....நீளுதே பட்டியல்

தினகரன் -தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்கள் எல்லாம் செய்த  நம்ம திராவிட கட்சிகள் தானே நம்மை ஆளுது அதனால்
இனிமே நாம அப்படி சொல்ல படாது

 நாம கற்று கொடுத்தது அது
சோ
 நாம இனி நம்மை முதுகை பார்த்துட்டு அப்புறமா அடுத்தவங்க முதுகை சொறிய ஆசைப்படலாம் .. ஓகே
எப்பா முஸ்லிம்களா ..உங்களுக்கும் ஒரு செய்தி
எவனோ ஒருத்தன் எடுத்த படத்தை  நீங்களே பப்ளிசிடி பண்ணீட்டீன்களே .. அதற்கு மாற்றா உங்க மதம் சொல்லும் நல்ல கருத்துக்களை  மற்றவர்களுக்கும் நாகரீகமாக சொல்லிருக்கலாமில்ல
 அதற்கு முன்
நீங்களும் கடைபிடிங்க... ஓகே

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...?

 ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...? 

இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கொள்கலனில் செயற்கை கதிர்வீச்சு பதார்த்தங்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

125 தொகுதி துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட இக்கொள்கலனில் கோபால்; -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு பதார்த்தம் காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் கலாநதி ஆர்.எல். விஜேவர்தன, டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக சபையின் கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்பின் இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதை நிறுத்திவைப்பதற்கு தீர்மானித்தாக அவர் கூறினார். 

"மேற்படி இந்திய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாம் இன்னும் ஆராயவில்லை. ஆனால் அப்பொருட்களை இந்தியாவுககு திருப்பி அனுப்புவதற்கும் இந்திய அணுசக்தி ஆணைக்குழு மற்றும் சரவ்தேச அணுசக்தி முகவரகம் ஆகியவற்றுக்கு இப்பொருட்கள் குறித்து அறிவிப்பதற்கும் இலங்கை சுங்கத் திணைக்களத்தை அறிவுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது" என கலாநிதி விஜேவர்தன கூறினார்.http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48679-2012-09-15-09-31-56.html

ஜப்பான் அணு உலை வெடிப்பில்  மீட்பு நடவடிக்கை களில் ஈடுபட்ட அத்தனை வாகனங்களையும்  ராணுவ ஊர்திகளையும் எடைக்கு கூட போடாமல் ஒதுக்கி வைத்து விட்டது.... சிந்திப்போமா ?
கல்பாக்கம் பகுதி மீனவர்களுக்கு  என்னென்ன புதுபுது வியாதிகள் வந்துள்ளது என்று அறிந்து கொள்ள முற்பட்டால்
நிச்சயம் சொல்வீர்கள்
அணு உலை வேண்டாம் என்று

புதன், 12 செப்டம்பர், 2012

இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால்


இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...
அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.
அ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களுக்கும்
ஆ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்குள்ளே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள்ளே இருப்பவர்களுக்கும்.
இ)இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்பவர்களுக்கும்
ஈ) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும்
உ)இந்தியாவின் சட்ட எல்லைக்குள் செயற்கை தீவில் இருப்பவர்களுக்கும், செயற்கை தீவவை உருவாக்கிவருபவர்களுக்கும்..(பிரிவு-1) 
ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது ம‌ட்டுமின்றி அணு உலை விப‌த்து அடுத்து வ‌ரும் த‌லைமுறைக‌ளையும் பாதிக்க‌க்கூடிய‌து. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விப‌த்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து ந‌ட‌ந்து ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் ஆன‌பின்ன‌ரும் அணு உலையிலிருந்து வெளியேறும் க‌திர்வீச்சு ப‌ன்ம‌ட‌ங்காக‌வே உள்ள‌து. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் இன்றும் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் க‌திர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டே வ‌ருகின்றார்கள்(1). செர்னோபில் விப‌த்து ந‌ட‌ந்த‌து 1986 ஏப்ரலில் என்ப‌தை நினைவில் கொள்க‌.
சில‌ விள‌க்க‌ங்களை இந்த‌ இட‌த்தில் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும்..
கூடங்குளம் அணு உலையை உதாரணமாகக்கொண்டு சில விளக்கங்கள் உங்களுக்காக-
அணு உலை நிர்வாகி (Operator) - NPCIL (Nuclear power corporation india ltd)
அணு உலை வழங்குநர்(Suplier) -இர‌சியா.
அப்துல்க‌லாம் முத‌ல் நார‌ய‌ண‌சாமி வ‌ரை சொல்லி வ‌ரும் இந்தியாவில்  கட்டப்படுகின்ற‌ அணு உலைக‌ள் எல்லாம் 100 விழுக்காடு பாதுகாப்பான‌து, சுனாமி, பூக‌ம்ப‌ம் போன்ற‌ இய‌ற்கை பேர‌ழிவுக‌ளை தாங்கும் ச‌க்தி கொண்ட‌து என்று சொல்லிவரும் வேளையில், "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010" இதற்கு நேர் மாறாக சொல்கின்றது.
அ) இயற்கை பேரழிவினால்(T-Sunami, நிலநடுக்கம்...) அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
ஆ) ஆயுத மோதலினாலோ, உள் நாட்டு போரினாலோ, பயங்கரவாதத்தினாலோ அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
இ) அணு உலை விபத்தினால், அருகில் கட்டப்பட்டுவரும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலை நிர்வாகம் பொறுப்பல்ல. (பிரிவு 5)
அதாவ‌து அணு உலை விப‌த்து ந‌ட‌ந்தால் யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ம‌றைமுக‌மாக‌ சொல்லுகின்றார்க‌ள். இந்த சரத்துகள் எல்லாம் இந்திய அணுசக்தி ஆணையத்தை காப்பாற்ற மட்டும் சேர்க்கப்பட்டவைய‌ல்ல, அடுத்து இந்தியாவில் அணு உலைகளை நிர்வகிக்க வருகின்ற‌ ரிலையன்ஸ், டாடா, அதை கட்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரிதும் மனதில் வைத்தே இந்த‌ ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ஒரு ம‌க்க‌ள் விரோதச் ச‌ட்ட‌மாகும்.


புகுசிமா அணு உலை விப‌த்திற்கு ஆழிப்பேர‌லை(T-Sunami) தான் காரண‌ம் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் ச‌ப்பான் அர‌சு நிய‌மித்த‌ உண்மை அறியும் குழு சொன்ன‌து புகுசிமா அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் ம‌னித‌ த‌வ‌றே என. இதுவே இந்தியாவாக‌ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் கணிப்பிற்கே விட்டுவிடுகின்றேன். மேலும் அணு உலை விப‌த்து என்ப‌து மிக‌ மோச‌மான‌ பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து. இது போன்ற‌ விப‌த்திற்கு கார‌ண‌ங்க‌ளாக‌ நில‌ந‌டுக்க‌ம் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மிக‌ எளிதாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் சொல்லிவிட்டு தங்க‌ள் பொறுப்பிலிருந்து ந‌க‌ர்ந்துவிடவே வாய்ப்புக‌ள் அதிக‌ம்.
சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌ செய்தியில் ப‌யங்கர‌‌வாதிக‌ள் சில‌ர் கல்பாக்கம் அணு உலையை த‌க‌ர்க்க‌ திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ கூறினார்க‌ள். இதையெல்லாம் முன்ன‌ரே உண‌ர்ந்து தானே என்ன‌வோ 2010லேயே ப‌யங்கர‌‌வாதிக‌ள் அணு உலையை தாக்கினால் அந்த‌ விப‌த்திற்கு யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ள‌து ம‌த்திய‌ அர‌சு.
மேலும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி அணு உலை விப‌த்து சிறிதா, பெரிதா என்று கூற‌ வேண்டிய‌து இந்திய‌ அணுச‌க்தி ஆணைய‌ம். 1947லிருந்து இதுவரை அவ‌ர்க‌ளுடைய‌
 ந‌ட‌வ‌டிக்கையை பார்ப்போமேயானால் இதுவரை எந்த‌ அணு உலையிலும் சிறிய‌ அள‌வில் கூட‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌க்கூட‌ அவ‌ர்க‌ள் இதுவரை முதலில் ஒப்புக்கொண்டதேயில்லை, பல போராட்டங்களுக்கு பின்னர் தான் , அவையெல்லாம் மிகச்சிறிய விபத்துகள், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று ஆரூடம் கூறுவார்கள். ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் இந்திய‌ அணு உலைக‌ளில் ந‌ட‌ந்த‌ விப‌த்துக‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ....
"1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம் அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்: கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள். கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது. கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள்.
1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற‌ கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.
இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க‌ வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த‌ பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4) 
இந்திய‌ அணு சக்‌தி ஆணைய‌ம் விப‌த்து என்று அறிவித்த‌ பிற‌கு ம‌த்திய‌ அர‌சு ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும், அந்த‌ விசாரணைக் குழுவே இழ‌ப்பீடு தொட‌ர்பாக தீர்ப்பு எடுக்கும், இந்த‌ தீர்ப்பின் மேல் க‌ருத்து சொல்ல‌வோ, அந்த‌ தீர்ப்பை மாற்ற‌வோ இந்தியாவில் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திற்கும் அதிகார‌ம் இல்லை. ஐந்திலிருந்து ப‌த்தாண்டுக‌ள் செய‌ல்ப‌டும் இந்த‌ விசாரணைக் குழு க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌த்திய‌ அர‌சிட‌ம் முறையிட‌ வேண்டும். இந்தியாவில் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு அபூர்வ‌மாக‌ கிடைக்கும் ஒரு சில‌ தீர்ப்புகள் நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌மாக‌ கிடைக்கின்ற‌ன‌, ஆனால் அந்த‌ வாய்ப்பும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இது மிக‌ப்பெரிய‌ அநீதியாகும். இந்தியாவின் தற்போதைய‌ அணு உலை சந்தையின் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். ம‌த்திய‌ அர‌சு அமைக்கும் விசாரணைக் குழுவும், ம‌த்திய‌ அர‌சும் ச‌ரியான‌ முறையில் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குமா? என்பதை பார்க்கும் முன்னர் போபாலில் நடந்த பேரழிவிற்கு இந்த‌ அர‌சு எப்ப‌டி வினையாற்றிய‌து என்ப‌தை ச‌ற்றே பார்ப்போம்.
1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்ப‌ட்ட‌ விபத்திற்கு அவ‌ர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த‌ கொஞ்ச‌ ப‌ண‌த்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வ‌ங்கியில் தான் வைத்துள்ளார்க‌ள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை.  அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த‌ ஆலை க‌ழிவுக‌ளை அர‌சு இன்னும் அக‌ற்றக்கூட‌ இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாத‌த்திற்குள் அந்த‌ க‌ழிவுக‌ளை அக‌ற்ற‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ள‌து. இது போன்ற‌ ப‌ல‌ தீர்ப்புகள் இதற்கு முன்னர் வ‌ந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த‌ தீர்ப்பை உட‌னே செவிம‌டுத்து ஆலைக‌ழிவுக‌ளை உட‌னே அக‌ற்ற‌ப்போவதும் இல்லை. ஒரு பேர‌ழிவு ஏற்ப‌டும் பொழுது இந்திய‌ அர‌சு எப்ப‌டி செய‌ல்ப‌டும் என்ப‌த‌ற்கு போபால் நிக‌ழ்வு ஒரு சாட்சியாகும். 
இந்த‌ ச‌ட்ட‌த்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய‌ ஒரே பிரிவு 17, அதாவ‌து அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் அணு உலையை க‌ட்டிய‌வ‌ர்க‌ள், அந்த‌ பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள் என்று தெரிந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டை அணு உலையை நிர்வ‌கிக்கும் அமைப்பு வாங்க‌ முடியும். கூட‌ங்குள‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 1,2 அணு உலைக‌ளுக்கு இந்த‌ பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் க‌ட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைக‌ளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும்  இந்த‌ பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான‌ அணு உலைக‌ளை க‌ட்டும் இர‌சியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் இந்தியாவை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை அணு உலையை ஆத‌ரிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌வேண்டும்.    
இது ம‌ட்டுமின்றி அதிக‌ப‌ட்ச‌ இழ‌ப்பீடாக‌ அர‌சு நிர்ண‌யி‌த்திருப்ப‌து 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விப‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளை ச‌ரிசெய்ய‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 72 ஆயிர‌ம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அர‌சு சொல்கின்ற‌து.(5) அது போன்ற‌ ஒரு விப‌த்து இந்தியாவில் ந‌ட‌ந்தால் 1500 கோடி ரூபாயை ம‌ட்டுமே இர‌சியாவோ, அமெரிக்காவோ, அல்ல‌து ரிலைய‌ண்சோ, டாட்டாக்க‌ளோ கொடுப்பார்க‌ள் மீத‌முள்ள‌ 70ஆயிர‌ம் கோடி ரூபாய்க‌ளும் ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இருந்தே எடுக்கப்படும்.  அதாவ‌து இர‌சியாவும், ம‌ற்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் கூறுவ‌து என்ன‌வென்றால் அணு உலை க‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் உருவாகும் இலாப‌ம் முழு‌க்க‌ அவ‌ர்க‌ளுக்கு, அத‌னால் விப‌த்து ஏற்ப‌ட்டு யாரேனும் பாதிக்க‌ப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.
இலாப‌ம் முத‌லாளிக்கு, பாதிப்பும், ந‌ட்டமும்  ம‌க்க‌ளுக்கு என்று முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ளது, இந்திய‌ அரசு.
இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ன‌நாய‌க‌ உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவோம்.
.......
ந‌ன்றி: ஞானி (இந்தியாவில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அணு உலை விப‌த்துக‌ள் தொட‌ர்பான‌ ப‌குதி ஞானியின் "ஏன் இந்த உலை வெறி" என்ற க‌ட்டுரையிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அக்கட்டுரைக்கான‌ இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்).
த‌ர‌வுக‌ள்:
1)http://www.youtube.com/watch?v=Wt0XNCk9hWI
2)http://gnani.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/
3) http://www.greenpeace.org/india/en/What-We-Do/Nuclear-Unsafe/Safety/Nuclear-accidents/Nuclear-accidents-in-India/Accidents-at-nuclear-power-plants/
4)http://www.dianuke.org/breaking-tritium-leak-nuclear-reactor-at-rawatbhata/
5)http://www.reuters.com/article/2011/10/20/us-japan-nuclear-noda-idUSTRE79J3W020111020
இக்கட்டுரை  தற்போதைய சூழலின் அவசியத்தால் கீற்று .காம் இணைய தளத்தில் வெளியானாதை அப்படியே இங்கே பகிர்ந்துள்ளேன் . சரியான நேரத்தில் சரியான பதிவை வெளியிட்ட
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=21086
கீற்று தளத் தினற்கு நெஞ்சார்ந்த நன்றி

வறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா

சமீப காலமாக முகநூலில்சோமாலிய இப்தார் படம் ...
சோமாலியரின் கேள்விக்கு அழுத தொலைகாட்சி நிகழ்ச்சி ...
 மீடியா அவ்வப்போது உமிழும் சோமாலிய கடற்கொள்ளை.... சோமாலியாவின் உண்மை முகம்தான் என்ன?
அந்த வறுமையின் வரலாறு தான் என்ன ?

 ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.

 நபிகளின் தோழர்களுக்கு நாடு கொடுத்த நஜ்ஜாசியின் பிரதேசம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதாவது (கி மு 3000 ) இந்த பகுதி மிக முக்கியமான வியாபார கேந்திரமாக பல பகுதிகளுக்கு இருந்துள்ளது . அப்போதைய பேரரசுகள் இந்த பகுதியுடன் வியாபார தொடர்பை கொண்டிருந்தன.
அரேபிய பகுதிகளிலும் இவர்களது வணிகதொடர்பு நெருக்கமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது.
       முஹம்மத் நபி (ஸல்)அவர்கள் பகிரங்க பிரசாரத்தை ஆரம்பித்த உடன் அப்போதைய மக்கத்து குரைஷிகள் எண்ணற்ற தொல்லைகள் கொடுக்க நபி அவர்களுக்கு தான் கஷ்டபட்டாலும் தனது தொண்டர்கள் கஷ்டப்பட கூடாது என சிறந்த தலைமை பண்பின் வெளிப்பாடாய் முத்ல் ஹிஜரத் செய்ய அனுமதிக்கிறார்கள் ..
                                அதற்கு முன்பே அதற்கான சாதகமான இடத்தை தேர்வு செய்து அபிசீனியா அதாவது இன்றைய சோமாலியா உள்ளடக்கிய பகுதிக்கு அனுப்புகிறார்கள் ..
           அங்கே நஜ்ஜாசி எனும் மன்னர் ஆட்சி செய்கிறார் ...
அங்கு புகலிடத்தை கண்டார்கள்.
இன்னொரு குழுவும் மக்காவிலிருந்து அபிசீநியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொள்கிறது .
        மக்கத்து குறைஷிகள் நஜ்ஜாசி மன்னரிடம் மிகுந்த வியாபார தொடர்பு உடையவர்கள் என்ற சிறப்பு அந்தஸ்தின் காரணமாக முஸ்லிம்களை திருப்பி அனுப்பிவிட கோரிக்கை வைக்கபடுகின்றது.
ஆனால் விசாரித்து நீதமாக முடிவெடுத்து முஸ்லிம்கள் தனது நாட்டில் கண்ணியத்துடன் தங்க அனுமதித்தார்.
( இங்கே அகதிகள் முகாம் அமைக்க வில்லை ... எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவே அனுமதித்திருக்கிறார் .. மத சுதந்திரம் உட்பட ..)

இஸ்லாமிய வரலாற்றில் ஹபச எனும் பெயர்பெற்ற இப்பகுதிக்கு கலிபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாம் முழுமையாக சென்றடைந்தது .

என்ன வளம் இல்லை அந்த திருநாட்டில் ....

   சோமாலியா மிகபெரும் கடற்கரையை கொண்டுள்ள நாடு ..
மிக முக்கிய இயற்கை வணிகமாக மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெற்ற நாடாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் சமீபகாலமாக வறுமைக்கு எடுத்துகாட்டு சொல்லும் நாடாக மாற்ற பட்டிருக்கின்றது .
   உலகின் இன்றைய ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடாக மட்டுமல்லாது தகரம் மற்றும் யுரேனியம் ஆம் இன்று உலகை ஆட்டிபடைக்கும் அணுகுண்டின் அடிப்படையான யுறேனியமும் சோமாலியாவில் அதிகமாகவே கிடைக்கின்றது ...
அப்புறம் என்ன எண்ணெய் உண்டு
யுறேனியமும் உண்டு
விடுவார்களா ..?
உலக நாட்டான்மைகள் .....இருந்தும் ஏன் வறுமை ...?

                                                       ........   இறைவன் நாடினால் அலசுவோம் ......
    

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

மன்னிப்பு . உங்களுக்கு பிடிக்காத வார்த்தையா..?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலை கழகத்தில் 
ஒரு ஆய்வு அது.

மனிதர்களின் மனதிற்கும் உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு .
.
ஆராய்ச்சிக்காக வழக்கம் போல் மனிதர்கள் பயன்படுத்தபட்டார்கள்
200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஐந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழு
த்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.


இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ஓகே வழக்கம் போல நம்ம விசயத்திற்கு வந்துவிடுவோம்....


மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் என்றால் அது கண்டிப்பா
நம்ம இஸ்லாத்தில் இருக்குமே ....
ஆம்!  இருக்கின்றது!!
நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.. பல தவறுகளை நாம் செய்கிறோம்.. பல தவறுகள் நமக்கு செய்யப்படுகிறது. அதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். இதன் விளைவினால் உறவுகள் முறிந்து போகிறது. இது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள். இதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சற்று ஆராய்வோம்.
மனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சில எதிர்பார்புகளை வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான். அதன் விழைவுகளால் சில வார்த்தைகளை கொட்டி விடுகிறான் இதனால் சிறு பிளவு அதன் பிறகு அதுவே பெரிய விரிசலாக போய் உறவே முறிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவசரத்தில் நாவை பேணாமல் சில வார்த்தைகளை கொட்ட அதனாலும் பிளவு ஏற்படுகிறது. சற்று ஆராய்ந்து பார்கும் போது மனிதனுக்கு சட்டென்று வரும் கோபம் தான் முக்கிய காரணமாக அமைகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (அறிவிப்பாளர்: அத்தியா அஸ் ஸஅதி ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)
சிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகோபத்தை கட்டுபடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்;. இன்னும் அண்ணல் நபி அவர்களிடம் ஒரு மனிதர், "எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், "கோபம் கொள்ளாதீர்" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "எனக்கு அறிவுரை கூறுங்கள்!" என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் "நீர் கோபம் கொள்ளாதீர்!" என்றே பதில் தந்தார்கள். நூல்: புகாரி
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "மூன்று விஷயங்களை இறைநம்பிக்கையாளாின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:

1. ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது.

2. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
3. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உாிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது." அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த நேரத்தில் எப்படிங்க கட்டுப்படுத்துகிறது? என்று தாங்கள் கூறுவது காதில் விழுகிறது. கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா? என்று ஆராய்ந்தால் அல்ஹம்துலில்லாஹ், அருமையான வழிமுறைகளை அண்ணல் நபி அவர்கள் காட்டிதந்திருக்கிறார்கள்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்."  (நூல்: அபூதாவூத்)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்." (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)
இந்த நபிமொழியிலும் இதற்கு முந்திய நபிமொழியிலும் கோபத்தை ஒழித்திட அண்ணலார் காட்டிய வழிமுறைகள் எவ்வளவு சரியானவை, பொருத்தமானவை என்பதற்கு அனுபவமே சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.
சரி கோபப்பட்டாகிவிட்டது. உறவும் முறிந்து விட்டது இப்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?
இஸ்லாம் கூறும் பதில் உடனே மன்னித்து விடுங்கள்.
அதெப்படி அவர்கள் எங்களுக்கு இந்த துரோகம் செய்து விட்டார்கள் எப்படி எங்களை மன்னிக்க சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா? சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே...
சரி மன்னிப்பவர்கள் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
திருமறை எவ்வளவு அழகாக கூறுகிறது பார்த்தீர்களா.. பிறாின் பிழைகளை மன்னிப்போர்களை அல்லாஹ் நேசிக்கின்றானாம் இதை விட ஒரு மூமினுக்கு வேறு என்ன வேண்டும் சகோதரர்களே.. அதுமட்டுமல்ல
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான (4:149)
"ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (42:37)
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
மூமினுகளைப்பற்றி அல்லாஹ் திருமறையில் அழகாக கூறுகிறான், அவர்கள் தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள் என்று. அவன் கூறிய மூமினாக நாம் ஆக வேண்டாமா? சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா? என்று கேட்பது காதில் விழுகிறது.
"இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குறிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்." (42:40)
பார்த்தீர்களா திருமறை கூறுவதை. ஒருவன் செய்த தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், அதனை மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குாிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. அளவற்ற அருளாளன், அவன் கொடுக்கும் கூலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள் சகோதரர்களே...சரி அடுத்து என்ன கூறுகிறார்கள் என்றால் "தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டால் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா?"
அல்லாஹ் கூறுகிறான்
"ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்" (42:43)
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சான்றிதல் கொடுக்கும் போது வேறு யாருடைய சான்றிதலும் அதற்கு ஈடாகாது.
இதுவரை திருமறை கூறியதைப்பற்றி பார்த்தோம், இனி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை பார்ப்போம். "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு அவ்விருவருக்குமிடையே பிரிவினை ஏற்படுத்திவிட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்." அல் அதபுல் முஃப்ரத்: "இதில் எவர் மீது தவறு என்று பார்க்கவில்லை இருவருமே அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்
இன்னும் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் : "என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?" இறைவன் கூறினான்: "எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குாியவர் ஆவார்." அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்யக்கூடாது), ஸலாமை முந்தி சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்" நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலுருந்து நீங்கி விட்டார்" அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அல் அதபுல் முஃப்ரத்
மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பிறிந்து இருக்கிறது. அல்லாஹ் இது பற்றி நம்மிடம் கேட்க மாட்டானா?
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான் நூல்கள்: முஸ்லிம்
சிந்தித்து பாருங்கள்.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அல்லாஹ் நம்மை உயர்த்தியே தீருவான் என்று. சிந்தியுங்கள் சகோதரர்களே..
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மட்டும் மன்னிக்கப்பட மாட்டான். அப்போது சொல்லப்படும், "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்". நூல்கள்: முஸ்லிம்
இப்படி மன்னிப்பு அளிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்க வேண்டாமா? அது மட்டுமல்ல இருவரிடையே சமரசம் செய்வது நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்ததொறு செயல் என்றும் கீழே கூறப்பட்டுள்ள ஹதீஸ் மூலம் விளங்கப்படுகிறது.
அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்தவொறு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக்கூடியதாகும்" நூல்: அல் அதபுல் முஃப்ரத்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சாிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)
இதை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தாயிப் நகரத்தில்; கல்லடி பட்ட போதும் அவர்களை மன்னித்தார்கள். மக்கா வெற்றியிலும் அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று குவித்திருக்கலாம். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிாியைப் போர்க்களத்தில் தோற்கடிப்பதை ஒருபோதும் தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதற்கு மக்காவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டாகும்.
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை அமைதியாகக் கைப்பற்றியதும் குறைஷிகள் தங்கள் முந்தையச் செயல்களுக்காக வருத்தம் தெரிவிக்கும் அளவிலே இருந்தனர். இக்ரிமா இப்னு அபூ ஜஹல் என்பவர் மட்டும் சிறு குழப்பம் விளைவித்தார். முஸ்லிம்களுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் சில பகுதிகளில் மட்டுமே பதற்ற நிலை இருந்தது. பொதுவாக அமைதியே நிலவியது. கஃபாவுக்கு அழைக்கப்பட்டபோது மதீனாவில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோரும்கூட புறப்பட்டுச் சென்றனர். பழமைமிக்க இந்தப் புகலிடத்தில் பாதுகாப் பினைத் தேடி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் கணிசமான மக்கள் அங்கே கூடினார்கள். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கஃபாவின் மேற்கூரையில் ஏறி 'அதான்' எனும் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பும்படி பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
கொடூரமான எஜமானனிடம் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட நீக்ரோதான் இந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அதான்' கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவின் வாசலில் நின்றார்கள். பல்லாண்டு காலமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களின் தோழர்களையும் துன்புறுத்தி அவர்களை நிம்மதியாக மதீனாவுக்குச் செல்லவிடாமல் கொலை செய்யத் திட்டம் போட்ட அதே குறைஷிகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள்.வணங்கத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு யாதொரு துணையும் கிடையாது. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தன் அடியார் முஹம்மதுக்கு (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உதவினான். சதிகாரர்களை அவன் ஓடச்செய்தான். பிறப்பினாலோ, பந்தங்களாலோ, சொத்துக்களாலோ கோரப்படும் தனியுரிமைகள் மற்றும் அந்தஸ்துகள் என்னால் ஒழிக்கப்படுகின்றன. கஃபாவை மேற்பார்வையிடுவது மற்றும் ஹஜ் பயணிகளுக்கு நீர் விநியோகிப்பது ஆகிய இரண்டைத்தவிர! குறைஷிகளே! அறியாமைக் காலத்தில் உங்களோடிருந்த கர்வத்தை அல்லாஹ் போக்கிவிட்டான்; முன்னோர்களிடம் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அல்லாஹ் நீக்கி விட்டான். ''மனிதன் ஆதமிலிருந்து தோன்றினான். ஆதம் மண்ணிலிருந்து தோன்றினார்'' அதற்குப்பின்,
''மனிதர்களே! உங்களை ஒரே ஆண் மற்றும் ஒரே பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை (பல) கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் இறைவனிடத்தில் சிறந்தவர் இறையச்சம் மிகுந்தவரே.'' (49:13)
என்ற வசனத்தை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
கூடியிருந்த குறைஞகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு குறைஷிகள்
''நல்லது. நீங்கள் சிறந்ததொரு சகோதரர்; மரியாதைக்குரிய சகோதரரின் மகன்''
என பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
''இன்று நீங்கள் பதிலளிக்க வேண்டியது எதுவுமில்லை; நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள்''  என்று கூறினார்கள்.
சகோதரர்களே...! குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் மூலம் பகைகையை பற்றி ஆராய்ந்தோம். அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்
"இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)" (25:73)
மேலே கூறப்பட்ட திருவசனப்படி மன்னிக்கப் போகிறீர்களா? இல்லை இன்னும் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறப்போகிறீர்களா?
தினமும் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே... நாம் ஒருவரை மன்னிக்காமல் நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா?
ஆகவே சகோதரார்களே அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். நாம் அனைவரும் பகைமையை மறந்து அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்வோமாக

(இக்கட்டுரைக்கு உதவிய நன்றிகுரியவர்கள்  : விடுதலை நாளி தழ், மற்றும் சகோதரர் முகம்மது ஆரிப் சிங்கப்பூர் 
மற்றும் முஹம்மது ரசீன்  )

 

Download